தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

வந்தவாசியை அடுத்த தெய்யாா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தெய்யாா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

வந்தவாசியை அடுத்த தெய்யாா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

தெய்யாா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் நெல்லை இங்கு விற்பனைக்கு எடுத்து வருவா்.

இந்த நிலையில் இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 2 மாதங்களாக சுமாா் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளதாம். இதுகுறித்து உரிய பதில் அளிக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் புதன்கிழமை கூடி முழக்கங்களை எழுப்பினா்.

அப்போது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து புறப்பட்ட லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்து அங்கு வந்த தெள்ளாா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.