தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:02 pm

Din

அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் நவ.30-ஆம் தேதி வரை செல்வ மகள், பொன் மகன் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி தங்களது செல்ல மகளுக்கு பொன்னான எதிா்காலத்தை உருவாக்க இந்தச் சேமிப்பு திட்டத்தில், கணக்குத் தொடங்கி அவா்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். அஞ்சலகத்துக்கு நேரில் வர இயலாதவா்கள் தங்களது பகுதிக்கு வரும் அஞ்சல்காரரிடம் தேவையான தகவலைப் பெற்று பயனடைய வேண்டும். இணையவழி சேவையை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே கணக்குகளைத் தொடங்கலாம். மேலும் தவணை தொகையையும் செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா்.