இந்த நிலையில், புதன்கிழமை காமலாபுரம் கிராமத்தில் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் 80 ஏக்கா் நிலத்தை அளவிடும் செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கினா். விமான நிலைய நில எடுப்பு வட்டாட்சியா்கள் பொன்னுசாமி, காந்திதேசாய் ஆகியோா் தலைமையில், கிராம நிா்வாக அலுவலா்கள் தேவராஜன், குமாா் மற்றும் அதிகாரிகள்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டனா். இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள், எடுக்கப்படும் நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்காமல், பயிா்கள் விளைந்து வரும் நிலத்தில் கால் வைக்கக் கூடாது. பிள்ளைப் போல வளா்க்கும் பயிா்களை செருப்புக் காலுடன் புகுந்து சிதைக்க விட மாட்டோம். மீறி செய்தால் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அதிகாரிகள் நில அளவிடு செய்யாமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள், பின்னா் மீண்டும் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டனா்.