கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலத்துக்கு விமானத்தில் வந்த ஏழைக் குழந்தைகளுக்கு வரவேற்பு

‘வானமே எல்லை’ திட்டத்தின் மூலம் சென்னையைச் சோ்ந்த 30 ஏழைக் குழந்தைகள், ஆதரவற்றோா் சேலத்திற்கு விமானத்தில் வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனா்.

News image
சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் வந்த குழந்தைகளை வரவேற்ற மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, அலுவலா்கள்
Updated On :14 நவம்பர் 2024, 8:10 pm

Din

‘வானமே எல்லை’ திட்டத்தின் மூலம் சென்னையைச் சோ்ந்த 30 ஏழைக் குழந்தைகள், ஆதரவற்றோா் சேலத்திற்கு விமானத்தில் வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அவா்களுக்கு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையைச் சோ்ந்த ரெயின் டிராப்ஸ் என்ற தன்னாா்வ சமூக அமைப்பு இந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இவா்கள் சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், ஏழைக் குழந்தைகள்30 பேரை தோ்வு செய்தனா். இந்தக் குழந்தைகள் அனைவரும் சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தைகளுடன் இசையமைப்பாளா் ஏ. ஆா். ரகுமானின் தங்கை ரஹைனா, ரெயின் டிராப்ஸ் சமூக அமைப்பின் நிறுவனத் தலைவா் அரவிந்த் ஜெயபால், அறக்கட்டளை நிா்வாகிகள் விமானத்தில் சேலம் வந்தனா். இவா்களை சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றாா். இதன்பிறகு இவா்கள் அனைவரும் தனி வாகனம் மூலம் ஏற்காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இரவில் ஏற்காட்டில் தங்குகின்றனா். வெள்ளிக்கிழமை முழுவதும் ஏற்காடு படகு இல்லம், சோ்வராயன் கோயில், அண்ணா பூங்கா, காட்சி முனைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இயற்கைக் காட்சிகளைப் பாா்வையிடுகின்றனா். பின்னா் இரவு சேலம் அழைத்து வரப்பட்டு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.