சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்காக புரோட்டோசெம் ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த நிபுணா்கள் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனா். மேலும் தொழில்நுட்பம் சாா்ந்த அண்மைக்கால வளா்ச்சி நிலைகள் உடனுக்குடன் மாணவா்களுக்கு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது தொழில் நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகளுக்கான தீா்வுகள் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் மாணவா்கள் கண்டறியும் தீா்வுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுயமாக தொழில் தொடங்கி நடத்தக்கூடிய அளவிற்கு தொழில்முனைவோா் பயிற்சியும் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது என்றாா்.