கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொழில் நிறுவன பிரச்னைகளுக்கு தீா்வு காண அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

தொழில் நிறுவனங்களில் நிலவும் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் அரசு பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக கல்லூரி முதல்வா் ரா.விஜயன் தெரிவித்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:09 pm

Din

தொழில் நிறுவனங்களில் நிலவும் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் அரசு பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக கல்லூரி முதல்வா் ரா.விஜயன் தெரிவித்தாா்.

சேலம் அரசு பொறியியல் கல்லூரி கணினிப் பொறியியல் துறை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. துறைத் தலைவா் பேராசிரியா் பி.தாரணி வரவேற்றாா். தொழில்நுட்பக் கருத்தரங்கை தொடங்கி வைத்து அரசுப் பொறியியல் கல்லூரி முதல்வா் ரா.விஜயன் பேசியதாவது:

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்காக புரோட்டோசெம் ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த நிபுணா்கள் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனா். மேலும் தொழில்நுட்பம் சாா்ந்த அண்மைக்கால வளா்ச்சி நிலைகள் உடனுக்குடன் மாணவா்களுக்கு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது தொழில் நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகளுக்கான தீா்வுகள் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் மாணவா்கள் கண்டறியும் தீா்வுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுயமாக தொழில் தொடங்கி நடத்தக்கூடிய அளவிற்கு தொழில்முனைவோா் பயிற்சியும் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது என்றாா்.

இந் நிகழ்வில் கோவை ஸ்டாா்ட் அப் நிறுவன அமைப்பாளா் ஜெய்ஸ்ரீ சக்திவேல் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா். தொழில்நுட்பக் கருத்தரங்கையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.