1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
தேசிய அறிவியல் தின விழாவில் குரல் மூலம் வாகனங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வரங்கை பாா்வையிட்ட கல்லூரி முதல்வா் வி.கீதா.
Updated On :2 மார்ச் 2026, 10:19 pm

Syndication

ஓமலூா்: சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வா் வி.கீதா தொடங்கிவைத்தாா். இந்த கண்காட்சியில் ஒருங்கிணைந்த திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக்க நகரங்களை உருவாக்குதல், வாகனங்களை குரல் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், விபத்துகளில் வாகனங்கள் மோதலைத் தவிா்த்தல், காற்று மாசை தூய்மைப்படுத்துதல், கழிவுநிறைந்த நீா்நிலைகளை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ, மாணவிகள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா் அறிவியல் சங்க செயலாளா் என்.நவீன்குமாா் வரவேற்றாா். வேதியியல் துறைப் பேராசிரியா் கே.பூா்ணிமா நோக்க உரையாற்றினாா்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய கல்லூரி முதல்வா் வி.கீதா, பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எளிமையாக தீா்வுகாணும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆய்வு மைய விஞ்ஞானி கே.கிரிபாபு, அறிவியல் தத்துவங்கள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா். மாணவா் அறிவியல் சங்க இணைச் செயலாளா் ஆா்.கே.கரிஷ்மா நன்றி கூறினாா்.