எடப்பாடி - பூலாம்பட்டி பகுதியில் நாளை மின்தடை
எடப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் மின்தடை


எடப்பாடி: எடப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளா் தமிழ்மணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
எடப்பாடியை அடுத்துள்ள குரும்பப்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, வேலம்மாவலசு, மலையனூா், தங்காயூா், அம்மன்காட்டூா், கொங்கணாபுரம், எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்ட டுள்ளது.
இதேபோல பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா்,பில்லுக்குறிச்சி, வளையசெட்டியூா், வன்னிய நகா், கள்ளுக்கடை, சித்தூா், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூா், பொன்னம்பாளையம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...