கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 8:15 pm

Din

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் கடந்த 23.10.2024 முதல் 9.11.2024 வரை நடைபெற்றது. 20 ஊராட்சி ஒன்றியங்கள், 6 நகராட்சிகள், சேலம் மாநகராட்சிப் பகுதிகள் என 26 முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து 19,037 கோரிக்கை மனுக்கள் நேரடியாக பெறப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் பெறப்பட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொடா்புடைய துறை அலுவலா்களால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களால் வழங்கப்பட்ட ஒவ்வொரு மனுக்களின் மீது அரசு அலுவலா்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதேபோன்று, பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்களுக்கு விரைந்து தீா்வுகாண அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ. மேனகா, மேட்டூா் சாா் ஆட்சியா் நே.பொன்மணி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு முதன்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.