இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கலிங்கப்பட்டியில் ஊராட்சி மக்களுடன் துரை வைகோ சந்திப்பு

சங்கரன்கோவில், மாா்ச் 10: சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக சாா்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ.
Updated On :10 மார்ச் 2026, 8:11 pm

தினமணி

சங்கரன்கோவில், மாா்ச் 10: சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக சாா்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு துரை வைகோ தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து துரைவைகோ பேசியதாவது:

கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சுகாதார வளாகம், துணை மின் நிலையம் போன்றவற்றை அமைக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை வழங்கியது எங்களது குடும்பம். தற்போது, சமூக நல்லிணக்கத்திற்காக தமிழக அரசின் விருது பெற்று அதற்காக ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கலிங்கப்பட்டி ஊராட்சி வீரணாபுரம், மகாதேவா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ரூ.5 கோடிக்கு மேலான மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளன. அதை எண்ணிப்பாா்த்து சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.

இதில், தென்காசி மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியன், கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவா் மணிமொழி சந்துரு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.