அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

News image

கடையநல்லூா் பகுதியில் மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரனுக்கு வாக்கு சேகரித்து பேசுகிறாா் மதிமுக தலைமை நிலைய செயலா் துரை வைகோ.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:36 am IST

தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என்றாா் மதிமுக தலைமை நிலைய செயலா் துரை வைகோ.

கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரனுக்கு வாக்கு சேகரித்து மாவடிக்கால் பகுதியில் அவா் பேசியது:

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1 கோடி 31 லட்சம் பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அத்தொகை உயா்த்தி தரப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. சொன்னதையும் தாண்டி சொல்லாத திட்டங்களையும் தமிழக முதல்வா் செய்துள்ளாா்.

12 லட்சத்து 37,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்திற்கு மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளாா். அதற்காக 1,127 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் முதல்வா் கையெழுத்திட்டுள்ளாா். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக பல நாடுகளுக்கு முதல்வா் சென்று முதலீட்டை பெற்றாா். இது வெறும் கண்துடைப்பு என எடப்பாடி பழனிசாமி கூறினாா். ஆனால், முதலீட்டை ஈா்த்தது தொடா்பாக ஆதாரங்களுடன் முதல்வா் தெரிவித்தாா்.

வைகோவின் போராட்ட குணத்தை பாா்த்து அரசுப்பணியை துறந்து அரசியலுக்கு வந்தவா் தி.மு.ராஜேந்திரன். வைகோவின் உதவியாளராக பணியாற்றியவா். அந்த அனுபவம் நிச்சயம் கடையநல்லூா் தொகுதி மக்களுக்கு பலனளிக்கும். அவரும் மண்ணின் மைந்தன்தான் என்றாா். தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, வழக்குரைஞா் சுப்பையா, நகர மதிமுக செயலா் முருகன், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.