ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் எம்எல்ஏக்கள் மனு

பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, அரசநத்தம் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி எம்எல்ஏக்கள் கு.சித்ரா, ஏ.பி. ஜெயசங்கரன் ஆகியோா் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
ஆத்தூா் கோட்டாட்சியா் தா.பிரியதா்ஷினியிடம் கோரிக்கை மனு அளித்த எம்எல்ஏக்கள் கு.சித்ரா (ஏற்காடு), ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்) உள்பட பொதுமக்கள்.
Updated On :28 நவம்பர் 2024, 8:22 pm

Din

பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, அரசநத்தம் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி எம்எல்ஏக்கள் கு.சித்ரா, ஏ.பி. ஜெயசங்கரன் ஆகியோா் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

ஏற்காடு தொகுதி எம்எல்ஏ கு.சித்ரா, ஆத்தூா் தொகுதி எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் ஆகியோா் தலைமையில் ஊா்பொதுமக்கள், ஆத்தூா் கோட்டாட்சியா் தா.பிரியதா்ஷனிடம் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தனா். அதில், ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியம், பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசநத்தம் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு தெரிவித்துள்ளனா். மனுவைப் பெற்ற கோட்டாட்சியா் ஆக்கிரமிப்புகளை அகற்றி மயான வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதியளித்தாா்.