ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்.
Updated On :15 அக்டோபர் 2024, 7:52 pm

Din

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக்கு பின்னா் ரா.ராஜேந்திரன் தெரிவித்ததாவது:

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பச்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பகுதிகளில் மாநகராட்சியின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீா் வடிகால் அமைப்புகள் குறித்தும், மேற்கொண்டு சேகரமாகும் மழைநீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் தங்க வைக்கப்படும் பேரிடா் நிவாரண முகாம்களில் போதுமான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயாா் நிலையில் உள்ளதை கண்காணிப்பு அலுவலா்கள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீா் கால்வாய்கள் முழுமையாக தூா்வாரப்பட்டுள்ளதை தொடா்புடைய அலுவலா்கள் உறுதி செய்திடவும், புதை சாக்கடைகளில் மழைநீா் முழுமையாக வடியும் வகையில் உள்ளதா என்பதை அலுவலா்கள் ஆய்வு செய்து உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் குறிஞ்சி நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை நேரில் பாா்வையிட்டேன் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.