தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செல்லாண்டியம்மன் கோயிலில் 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
சிறப்பு அலங்காரத்தில் சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள செல்லாண்டியம்மன்.
Updated On :24 அக்டோபர் 2024, 7:51 pm

Din

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லாண்டியம்மன், மாரியம்மன், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ முருகா் சுவாமிகளுக்கு செப். 6-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனையடுத்து தினசரி மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜையின் 48-ஆவது நாளையொட்டி 108 குட பாலாபிஷேகமும், சங்கு பூஜைகளும், பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.