பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-ஹிசாா் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - ஹிசாா் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 12:28 am

Din

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - ஹிசாா் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு;

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவையில் இருந்து ஹரியாணா மாநிலம், ஹிசாருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக இருமாா்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கூடுதலாக 2 குளிா்சாதனப் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஹிசாா் - கோவை வாராந்திர எக்ஸ்பிரஸில் வரும் அக். 2-ஆம் தேதி முதல் கூடுதலாக இரண்டடுக்கு ஏசி பெட்டி-1, மூன்றடுக்கு ஏசி பெட்டி-1 இணைக்கப்படுகின்றன. மறுமாா்க்கத்தில், கோவை - ஹிசாா் வாராந்திர எக்ஸ்பிரஸில் வரும் அக். 10-ஆம் தேதி முதல் கூடுதலாக இரண்டடுக்கு ஏசி பெட்டி-1, மூன்றடுக்கு ஏசி பெட்டி-1 இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.