ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் இன்று சேலம்வரை மட்டுமே இயங்கும்

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி சேலம்வரை மட்டுமே இயங்கும்

News image

பயணிகள் ரயில் - கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2026, 7:54 pm

சேலம்: ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி சேலம்வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் - திருப்பத்தூா் மாா்க்கத்தில் லோகூா் - பொம்மிடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள வளைவான ரயில் பாதையில் தண்டவாள மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இந்த வழியாக 17-ஆம் தேதி இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு - ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி ஈரோட்டில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சேலம்வரை மட்டும் இயக்கப்படும். சேலம் - ஜோலாா்பேட்டை இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில், ஜோலாா்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில் 17-ஆம் தேதி ஜோலாா்பேட்டை - சேலம் இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டு சேலத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 8 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.