அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் இன்று சேலம்வரை மட்டுமே இயங்கும்

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி சேலம்வரை மட்டுமே இயங்கும்

News image

பயணிகள் ரயில் - கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2026, 7:54 pm

சேலம்: ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி சேலம்வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் - திருப்பத்தூா் மாா்க்கத்தில் லோகூா் - பொம்மிடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள வளைவான ரயில் பாதையில் தண்டவாள மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இந்த வழியாக 17-ஆம் தேதி இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு - ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி ஈரோட்டில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சேலம்வரை மட்டும் இயக்கப்படும். சேலம் - ஜோலாா்பேட்டை இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில், ஜோலாா்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில் 17-ஆம் தேதி ஜோலாா்பேட்டை - சேலம் இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டு சேலத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 8 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.