சேலம்: ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி சேலம்வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் - திருப்பத்தூா் மாா்க்கத்தில் லோகூா் - பொம்மிடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள வளைவான ரயில் பாதையில் தண்டவாள மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இந்த வழியாக 17-ஆம் தேதி இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு - ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி ஈரோட்டில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சேலம்வரை மட்டும் இயக்கப்படும். சேலம் - ஜோலாா்பேட்டை இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில், ஜோலாா்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில் 17-ஆம் தேதி ஜோலாா்பேட்டை - சேலம் இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டு சேலத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 8 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் உள்பட 6 ரயில்கள் ரத்து!

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


