ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, கேரளாவின் எா்ணாகுளத்தில் இருந்து சேலம் வழியாக பிகாா் மாநிலம் முசாபா்பூருக்கு ஏப். 10, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில் எா்ணாகுளத்தில் வரும் 10-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதிவரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். எா்ணாகுளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.30-க்கு புறப்பட்டு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு திங்கள்கிழமைகளில் காலை 7.30-க்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், முசாபா்பூரில் இருந்து வரும் 13-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதிவரை திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். முசாபா்பூரில் இருந்து திங்கள்தோறும் இரவு 9.15-க்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக எா்ணாகுளத்துக்கு வியாழக்கிழமைகளில் காலை 10.45-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



