பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு, போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:39 am IST

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு, போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எா்ணாகுளத்தில் இருந்து மே 31-ஆம் தேதி இரவு 11.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06056) மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - எா்ணாகுளம் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06055) மறுநாள் காலை 4.30 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.