சென்னை அரக்கோணம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூன் 25 முதல் 28 வரை கோவையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12680) காட்பாடி - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயிலானது, மேற்கண்ட நாள்களில் கோவை - காட்பாடி இடையே மட்டும் இயக்கப்படும். இதேபோல, ஜூன் 25 முதல் 28-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை - கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12679) மேற்கொண்ட நாள்களில் சென்னை - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, மாலை 4.15 மணிக்கு காட்பாடியில் இருந்து கோவைக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளம், மங்களூரு ரயில்கள் தாமதமாக இயக்கம்: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜூன் 25 முதல் 28-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை- மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் (எண்: 22637) 1 மணி நேரம் 15 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும்.
ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- கோவை வந்தேபாரத் ரயில்(எண்: 20643) 45 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
ஜூன் 28-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (எண்: 12697) 1 மணி நேரம் 30 நிமிஷங்கள் தாமதமாக மாலை 4.40 மணிக்குப் புறப்படும்.
ஜூன் 28-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை- திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12695) 1 மணி நேரம் 30 நிமிஷங்கள் தாமதமாக மாலை 4.50 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில்: ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை தாமதமாக புறப்படும்

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



