கோடை விடுமுறையையொட்டி சென்னை சென்ட்ரல்- போத்தனூா் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கிவருகிறது. அந்தவகையில், சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேலும் 9 சேவைகளை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, போத்தனூா்- சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் வரும் 20 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை ( புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) இயக்கப்படும். போத்தனூரில் காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.45 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு ரயில் வரும் 20 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை (புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை நீடிப்பு

போத்தனூா்-சென்னை சிறப்பு ரயில்: ஜூன் 5 வரை நீட்டிப்பு

சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

