11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி சென்னை சென்ட்ரல்- போத்தனூா் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோடை விடுமுறையையொட்டி சென்னை சென்ட்ரல்- போத்தனூா் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கிவருகிறது. அந்தவகையில், சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேலும் 9 சேவைகளை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, போத்தனூா்- சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் வரும் 20 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை ( புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) இயக்கப்படும். போத்தனூரில் காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.45 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு ரயில் வரும் 20 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை (புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.