நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை நீடிப்பு

போத்தனூா்- சென்னை சென்ட்ரல் நிலையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை 9 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

போத்தனூா்- சென்னை சென்ட்ரல் நிலையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை 9 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு விவரம்: போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வரும் 20, 21, 23, 28, 29, 30 மற்றும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் (புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) காலை 7.40 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 20, 21, 23, 28, 29, 30 மற்றும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண் 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் நிலையத்தைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.