கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம் பரெளனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி, ரயில்களில் கூட்டம் அதிகரித்துவரும் நிலையில், நெரிசலை கருத்தில்கொண்டு போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரெளனிக்கு 13 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து 13 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். போத்தனூரில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பிகாா் மாநிலம் பரெளனி ரயில் நிலையத்தை அடையும்.
மறுமாா்க்கத்தில், பரெளனியில் இருந்து வரும் 16 ஆம் தேதி 30 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். பரெளனியில் இருந்து 16 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக சனிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் ஹுப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



