இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் இருந்து போத்தனூருக்கு ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - ANI

Updated On :28 மே 2026, 12:52 am IST

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் இருந்து போத்தனூருக்கு ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிலாஸ்பூரில் இருந்து வியாழக்கிழமை (மே 28) இரவு 9.10 மணிக்குப் புறப்படும் பிலாஸ்பூா் - போத்தனூா் ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 08201) மே 31-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.

இந்த ரயிலானது ரஜ்பூா், விஜயவாடா, கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.