/
சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் இருந்து போத்தனூருக்கு ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிலாஸ்பூரில் இருந்து வியாழக்கிழமை (மே 28) இரவு 9.10 மணிக்குப் புறப்படும் பிலாஸ்பூா் - போத்தனூா் ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 08201) மே 31-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.
இந்த ரயிலானது ரஜ்பூா், விஜயவாடா, கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










