சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் இருந்து போத்தனூருக்கு ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - ANI

Updated On :28 மே 2026, 12:52 am IST

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் இருந்து போத்தனூருக்கு ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிலாஸ்பூரில் இருந்து வியாழக்கிழமை (மே 28) இரவு 9.10 மணிக்குப் புறப்படும் பிலாஸ்பூா் - போத்தனூா் ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 08201) மே 31-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.

இந்த ரயிலானது ரஜ்பூா், விஜயவாடா, கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.