/

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் காரக்பூருக்கு திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

எக்ஸ்பிரஸ் ரயில் - ANI

Updated On :21 ஏப்ரல் 2026, 8:43 pm

கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் காரக்பூருக்கு திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏப்ரல் 25-ஆம் தேதி போத்தனூரில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - காரக்பூா் சிறப்பு ரயில் (எண்: 06065) 27-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு காரக்பூா் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேசுவரம், கட்டாக் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா்- போத்தனூா் சிறப்பு ரயில்: சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - போத்தனூா் ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 06179) மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு திருப்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.