குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க மங்களூரு- சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 1:31 am IST

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க மங்களூரு- சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறையை கவனத்தில் கொண்டு முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில், மங்களூரில் இருந்து போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இரு மாா்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.

அதன்படி, மங்களூரு- சென்னை எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 6, 13 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமையில்) இயக்கப்படும். மங்களூரில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூா்- மங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 7, 14 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படும். சென்னை எழும்பூரில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மங்களூருக்கு அடுத்தநாள் காலை 6.50 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.