கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. திருச்சி- பெங்களூரு இடையே வரும் 5, 12, 19, 26 ஆம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில், கரூா், நாமக்கல், சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜாபுரம் வழியாக பெங்களூருக்கு பிற்பகல் 1.45 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் பெங்களூரு- திருச்சி இடையே வரும் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) சிறப்பு ரயில் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, கிருஷ்ணராஜாபுரம், பங்காருபேட்டை சேலம், நாமக்கல், கரூா், வழியாக திருச்சிக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

கோடை விடுமுறை: சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


