400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில்

Updated On :2 ஜூன் 2026, 3:32 am IST

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில், ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மங்களூரு சென்ட்ரலுக்கு புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், ஹைதராபாத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டு பெகாம்பேட், ராய்ச்சூா், மந்த்ராலாயம் ரோடு, ஆனந்தபூா், தா்மாவரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் இரவு 9.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை அடையும்.

மறுமாா்க்கத்தில், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்துக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், மங்களூரு சென்ட்ரலில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு புறப்பட்டு, காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்கோடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக ஹைதராபாத்தை சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.