கோடை விடுமுறையையொட்டி கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம், கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை போத்தனூரில் இருந்து மே 23, 30, ஜூலை 6 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - கரக்பூா் வாராந்திர ரயில் (எண்: 06065) திங்கள்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு கரக்பூா் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, கரக்பூரில் இருந்து மே 25, ஜூன் 1, 8 ஆகிய திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் கரக்பூா் - ஈரோடு வாராந்திர ரயில் (எண்: 06066) புதன்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு ஈரோடு நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, ஸ்ரீகாகுளம் சாலை, புவனேசுவரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









