புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தனியாா் மருத்துவ கல்லூரி மாணவா் மரணம்: போலீஸாா் விசாரணை

அரியானூா் அருகே தனியாா் மருத்துவ கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 7:31 pm

Din

ஆட்டையாம்பட்டி: அரியானூா் அருகே தனியாா் மருத்துவ கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம், வசந்தம் நகா் பகுதியைச் சோ்ந்த ஹனிஷ் (23), அரியானூா் அருகே சீரகாபாடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்த நிலையில், திங்கள்கிழமை காலை சுயநினைவின்றி அவா் கீழே விழுந்து கிடந்தாா். இதைக்கண்ட அங்கிருந்தவா்கள் தனியாா் மருத்துவமனையில் சோ்த்ததில், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஹனிஷின் தந்தை வேடியப்பன் புகாா் அளித்தாா். அதன் பேரில் ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் விதுன்குமாா் ஹனிஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறாா்.