தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

திருநங்கை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
கழுத்தறுத்து கொல்லப்பட்ட திருநங்கை
Updated On :28 ஆகஸ்ட் 2025, 8:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறுவைச் சிகிச்சை செய்து திருநங்கையாகத் தன்னை மாற்றிக்கொண்டார்.

அதன் பிறகு தனது பெயரை கனி(18) என்று மாற்றிக் கொண்டார். அதன் பின்பு அப்பகுதியிலிருந்து வெளியேறி வடக்கு ரயில்வே காலனி பகுதியில் குடியேறியுள்ளார். அவருக்கு திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை உறவினர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது கனி தலை மற்றும் முகம் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்பு இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிவிக்கப்பட்டதை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கனியின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனி முன்பாக வாயில் துணியால் வைத்து அடைத்து இரும்பு ராடு கொண்டு தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது தலை, முகம் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக உள்ள நவீன் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருநங்கை கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சேலம் சுற்று வட்டப் பகுதிகளில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

summary

The incident of a transgender woman being strangled to death in the Ponnammapettai area has caused shock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.