பிகார் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் சட்டப்பேரவை.
பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிரட்டலைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் பிரேம் குமார், சட்டப்பேரவைச் செயலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
நிலைமை குறித்து தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு தகவல் தெரிவிப்பதுடன் சட்டப்பேரவை வளாகத்தில் முழுமையான சோதனையை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 16 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Summary
The Bihar assembly on Friday received a bomb threat through email, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



