பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிகார் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
பிகார் சட்டப்பேரவை.
Updated On :13 மார்ச் 2026, 11:11 am

தினமணி செய்திச் சேவை

பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிரட்டலைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் பிரேம் குமார், சட்டப்பேரவைச் செயலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

நிலைமை குறித்து தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு தகவல் தெரிவிப்பதுடன் சட்டப்பேரவை வளாகத்தில் முழுமையான சோதனையை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 16 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.