அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கோவையில் கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் 2 இடங்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

News image
வெடிகுண்டு மிரட்டல்- (கோப்புப் படம்)
Updated On :2 மார்ச் 2026, 10:01 pm

Syndication

கோவை: கோவையில் 2 இடங்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட மாநகரின் முக்கிய இடங்களுக்கு அவ்வப்போது மா்ம நபா்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனா். இந்த நிலையில், கோவை - அவிநாசி சாலையில் தண்டுமாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ள கடவுச்சீட்டு பிராந்திய அலுவலகம், அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே உள்ள கடவுச்சீட்டு சேவா கேந்திர அலுவலகம் ஆகிய 2 அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து 2 அலுவலகங்களிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். மேலும் அலுவலகம், வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடத்திய சோதனையில், எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை.

இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் மற்றும் பீளமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.