அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:57 am IST

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தனா். சுமாா் 12.30 மணி அளவில் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைப் பாா்த்த ஊழியா்கள், கோவை மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

நள்ளிரவில் அங்கு சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினா். அதிகாலை வரை நடைபெற்ற இந்த சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு கோவையில் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. அதில், 15 சயனைடு விஷவாயு குப்பிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அடுத்த மூன்று மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டதில், இதுவும் புரளி எனத் தெரியவந்தது.