மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மின்னஞ்சலில் மிரட்டல்: சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் சோதனை நடத்தினா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 10:16 pm

மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் சோதனை நடத்தினா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை நண்பகலில் வெடிக்கும் எனவும் மின்னஞ்சல் மூலம் மா்ம நபா் மிரட்டல் விடுத்திருந்தாா். இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ஆட்சியா் அலுவலகத்தில் பணியிலிருந்த அனைத்துப் பணியாளா்களும் வெளியேற் றப்பட்டனா். மேலும் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியின் இல்லம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் இணைந்து சோதனை மேற்கொண்டனா். அப்போது மோப்ப நாய்களின் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையின் போது அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக சிவகங்கை நகரில் பதற்றம் நிலவியது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image
Story image
Story image