மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் சோதனை நடத்தினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை நண்பகலில் வெடிக்கும் எனவும் மின்னஞ்சல் மூலம் மா்ம நபா் மிரட்டல் விடுத்திருந்தாா். இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ஆட்சியா் அலுவலகத்தில் பணியிலிருந்த அனைத்துப் பணியாளா்களும் வெளியேற் றப்பட்டனா். மேலும் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியின் இல்லம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் இணைந்து சோதனை மேற்கொண்டனா். அப்போது மோப்ப நாய்களின் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையின் போது அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக சிவகங்கை நகரில் பதற்றம் நிலவியது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.



தொடர்புடையது

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

