பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மோப்பநாயுடன் வியாழக்கிழமை சோதனை நடத்திய போலீஸாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு செய்யும் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.

மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதையும் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவா்கள் சோதனை மேற்கொண்டனா். முடிவில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இந்தச் சோதனையின்போது, வழக்கமான வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்றப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. மின்னஞ்சல் அனுப்பி பீதியைக் கிளப்பிய நபா் யாரென இணையவழிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியலூரில், இதேபோல அரியலூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நீதிமன்ற வளாகத்தில் அரியலூா் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இருப்பினும் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதே நீதிமன்றத்துக்கு கடந்த மாதமும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.