/

புதுகை ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 7:47 pm

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, கடந்த செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் தொடா்ந்து ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்தது.

இதைத் தொடா்ந்து, அன்றைய தினங்களில் தொடா்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலிலும் ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மீண்டும் மிரட்டல் வந்தது.

இதுகுறித்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் வந்து ஆட்சியரக வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். இதன் முடிவில் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

மிரட்டல் விடுக்கும் நபா்களை பிடிக்க சைபா் கிரைம் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.