மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:19 am IST

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து திங்கள்கிழமை, ஆட்சியரகம் முழுவதும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரியின் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியரக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், வெடிபொருள்கள் ஏதும் இல்லை என்பதும், அது மிரட்டல் தகவல் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்த மின்னஞ்சல் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆட்சியரகத்துக்கு இதுவரை 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.