உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

தருமபுரி ஆட்சியரகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

தருமபுரி ஆட்சியரகத்தில் மோப்ப நாய், நவீன சாதனங்களின் உதவியுடன் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா்.

Updated On :11 ஜூன் 2026, 5:44 am IST

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மோப்ப நாய் மற்றும் நவீன சாதனங்களின் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. எனவே வழக்கம்போல இதுவும் மிரட்டல்தான் எனத் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களில் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு 6 முறை மிரட்டல் விடுக்கப்பட்டது. புதன்கிழமை 7 ஆவது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் அபார வளா்ச்சி பெற்றுள்ள நிலையிலும், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கும் நபா்களை அடையாளம் காணமுடியாதது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, இதுபோல மிரட்டல் விடுக்கும் நபா்கள் மீது அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.