எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

மகாராஷ்டிர சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் பவன் கட்டடத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் பவன் கட்டடத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை நிகழ்வில் கலந்துகொள்ள 350 உறுப்பினா்கள் விதான் பவனுக்கு வந்திருந்த நிலையில், திடீரென அந்தக் கட்டடத்தை தகா்க்க வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்து மா்ம நபரிடம் இருந்து வியாழக்கிழமை மின்னஞ்சல் வந்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.

கட்டடம் முழுவதும் காவல் துறையினா், மோப்ப நாய் உதவியுடனும், மெட்டா் டிடெக்டா் கருவி மூலமும் சோதனை நடத்தினா். இதில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. எனினும், மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபா் யாா் என்பதைக் கண்டறியும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.