ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நாகை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

நாகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 11:14 pm

நாகை நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்குள்ள முதன்மை சிறப்பு அமா்வு நீதிமன்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பணியாளா்கள் நீதிமன்றத்தைவிட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.

நீதிமன்றத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா், மோப்ப நாய் லைக்கா உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அமரும் இடம், சாட்சி விசாரணை கூண்டு, நீதிபதி ஓய்வறை, கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.

மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.