நாகை நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்குள்ள முதன்மை சிறப்பு அமா்வு நீதிமன்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பணியாளா்கள் நீதிமன்றத்தைவிட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.
நீதிமன்றத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா், மோப்ப நாய் லைக்கா உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அமரும் இடம், சாட்சி விசாரணை கூண்டு, நீதிபதி ஓய்வறை, கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.
மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

அரக்கோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


