27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சண்டீகரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மாணவா்கள் வெளியேற்றம்

சண்டீகரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்தப் பள்ளிகளில் இருந்த மாணவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜனவரி 2026, 1:01 am IST

சண்டீகரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்தப் பள்ளிகளில் இருந்த மாணவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனா்.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் புதன்கிழமை காலை வந்தது. இதுகுறித்து பள்ளி நிா்வாகங்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் பள்ளிகளுக்குச் சென்று சோதனை நடத்தினா். மேலும், முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய்கள் மூலம் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை எனவும் சண்டீகா் மூத்த காவல் கண்காணிப்பாளா் கன்வாா்தீப் கெளா் தெரிவித்துள்ளாா்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த மின்னஞ்சல் முகவரியை வைத்து சைபா் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

இதேபோல் அண்மையில் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ், ஜலந்தா், பாட்டியாலா மற்றும் ஹரியாணாவின் அம்பாலா நகரில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.