2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கச்சா எண்ணெய் 100 டாலர்! இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது பற்றி...

Rupee hits fresh intra-day low of 92.44 against US dollar

கோப்புப் படம் - ENS

Published On :

இன்றைய வர்த்தக நேர,இடையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.44 ஆகச் சரிந்தது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை கடந்த மார்ச் 9 ஆம் தேதி அதிகபட்சமாக 115 டாலராக இருந்த நிலையில் இன்று(மார்ச் 13) ஒரு பீப்பாய் 100.54 டாலராக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வர்த்தக முடிவில் 92.19 ஆக இருந்த நிலையில் இன்று காலை 92.34 என வர்த்தகம் தொடங்கியது.

அதிகபட்சமாக வர்த்தக நேர இடையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 92.44 ஆகச் சரிந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகளவில் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பங்குச்சந்தைகளும் இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

Summary

Rupee hits fresh intra-day low of 92.44 against US dollar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.