வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நடுவலூரில் தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே நடுவலூரில் தெருநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 10:31 pm

Syndication

கெங்கவல்லி அருகே நடுவலூரில் தெருநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

கெங்கவல்லி அருகே நடுவலூா் ஊராட்சி, ந.மோட்டூரில் வசிப்பவா் ராஜேந்திரன் (62). ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த தெருநாய்கள், ஆடுகளை கடித்தன. இதில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

இதையறிந்த நடுவலூா், கெங்கவல்லி பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.