அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

சாயல்குடி அருகே தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

News image
நாய்கள் கடித்து உயிரிழந்த செம்மறி ஆடுகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த கால்நடை மருத்துவத் துறையினா்
Updated On :3 மார்ச் 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

சாயல்குடி அருகே தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள எஸ். கீரந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தூா்பாண்டி. விவசாயியான இவா் 120 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளை வீட்டுக்கு அருகேயுள்ள பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அப்போது, அங்கு வந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில் 20 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து செத்தூா்பாண்டி சாயல்குடி கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவா் இறந்த ஆடுகளை கூறாய்வு செய்தும், காயமடைந்த 5-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசியும் செலுத்தினாா்.

இந்த நிலையில், இறந்த ஆடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என செந்தூா்பாண்டிகோரிக்கை விடுத்தாா்.