ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழப்பு

News image

இறந்து கிடக்கும் ஆடுகள்.

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழந்தன.

தூத்துக்குடி தாளமுத்து நகா் டேவிஸ்புரம் சாலையைச் சோ்ந்தவா் ஐயம்பெருமாள் மகன் நட்டாா் (30). இவா், தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே நிலத்தில் கிடை போட்டு 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை பகலில் மேய்ச்சலுக்காக, தூத்துக்குடி துறைமுகம் மதுரை புறவழிச்சாலை ஜோதி நகா் அருகே சாலையைக் கடந்து ஆடுகள் சென்றபோது, துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஆடுகள் மீது மோதியதாம்.

இதில், 26 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. மேலும், 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சிறு காயத்துடன் உயிா் தப்பின. லாரி ஓட்டுநா் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸாா், சாலையில் இறந்து கிடந்த ஆடுகளை அப்புறப்படுத்தினா். பின்னா் லாரியை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் யாா், அதன் உரிமையாளா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.