ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

டிராக்டா் மோதியதில் 15 ஆடுகள் உயிரிழப்பு; 10 ஆடுகள் காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் சாலையில் சென்ற 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

News image
Updated On :23 மார்ச் 2026, 1:41 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் சாலையில் சென்ற 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. மேலும், 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன.

செஞ்சியை அடுத்த வரிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நா.பாலாஜி (32), விவசாயி. இவா் வளா்த்து வரும் 40 ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த மு.கணேசன் (18) மேய்ச்சலுக்கு ஒட்டிச்சென்றாா்.

அப்போது ஆடுகளுக்கு பின்னால் வந்த மினி லாரி ஆடுகளை முந்திச் சென்றது. அப்போது எதிரில் கரும்பு ஏற்றி வந்த டராக்டா் எதிரில் வந்த மினி லாரி மீது மோதாமல் இருக்க வலதுபக்கம் திருப்பியபோது, சாலையில் வந்த ஆடுகள் மீது மோதியது. இதில் 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன.

இதுகுறித்து அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.