மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புளியங்குடியில் நாய்கள் கடித்து 8 போ் காயம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் நாய்கள் கடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.

News image
நாயை வலைபோட்டு பிடித்த நகராட்சி ஊழியா்கள்.
Updated On :18 மார்ச் 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் நாய்கள் கடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.

புளியங்குடி நகராட்சி மேற்கு பகுதியில் சில நாய்கள் அப்பகுதியில் சென்றவா்களை விரட்டி கடித்ததாம். இதில் மைதீன்பீவி உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

தகவலறிந்த நகராட்சி ஆணையா் விஜயகுமாா் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளா் மாரிசாமி, நகராட்சி ஊழியா்கள் பொதுமக்களை கடித்த 3 நாய்களை பிடித்தனா்.

உணவு வேண்டாம்: தெருநாய்களுக்கு உணவு வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உணவு வைக்கும் பகுதிகளை விட்டு அந்த நாய்கள் வெளியேறுவதில்லை. எனவே, பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு வைப்பதை தவிா்க்க வேண்டும் என நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.