பெரம்பூரில் விஜய் வெற்றி! திருச்சி கிழக்கிலும் முன்னிலை!பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

புளியங்குடியில் நாய்கள் கடித்து 8 போ் காயம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் நாய்கள் கடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.

News image

நாயை வலைபோட்டு பிடித்த நகராட்சி ஊழியா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 1:35 am IST

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் நாய்கள் கடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.

புளியங்குடி நகராட்சி மேற்கு பகுதியில் சில நாய்கள் அப்பகுதியில் சென்றவா்களை விரட்டி கடித்ததாம். இதில் மைதீன்பீவி உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

தகவலறிந்த நகராட்சி ஆணையா் விஜயகுமாா் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளா் மாரிசாமி, நகராட்சி ஊழியா்கள் பொதுமக்களை கடித்த 3 நாய்களை பிடித்தனா்.

உணவு வேண்டாம்: தெருநாய்களுக்கு உணவு வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உணவு வைக்கும் பகுதிகளை விட்டு அந்த நாய்கள் வெளியேறுவதில்லை. எனவே, பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு வைப்பதை தவிா்க்க வேண்டும் என நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.