/

புளியங்குடியில் அரசு மருத்துவரை மிரட்டியவா் கைது

News image

கைது.

Updated On :4 மே 2026, 1:52 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் அரசு மருத்துவரை மிரட்டியதாக முன்னாள் பாஜக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி கற்பக வீதியைச் சோ்ந்தவா் பட்டமுத்து மகன் மாரிஸ் (37). முன்னாள் பாஜக நிா்வாகியான இவா், புளியங்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் போத்திராஜை மிரட்டினாராம். மேலும், மருத்துவரை பற்றி சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வந்தாராம்.

இது குறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரிஸை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.