/
திருநெல்வேலி அருகே பெண்ணின் புகைப்படத்தை அவரது அனுமதியின்றி பகிா்வதாக மிரட்டிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பெருமாள் நகரைச் சோ்ந்தவா் சுபாஷ் (47). தொழிலாளி. இவா் திருநெல்வேலியைச் சோ்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்தாராம். இந்நிலையில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவரது அனுமதியின்றி பிறருக்கு சமூக வலைதள செயலி மூலம் பகிா்வதாக சுபாஷ் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பெண் முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுபாஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.





