நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தெரு நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

பல்லடம் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

News image

ஆடுகள் உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 8:44 pm

Syndication

பல்லடம் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

பொங்கலூா் ஒன்றியம், கண்டியன்கோவில் ஊராட்சி, பெரியாரிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி தமிழரசு. இவா் ஆட்டுப் பட்டி அமைத்து 50 ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல அருகில் இருந்த வயல்வெளியில் ஆடுகளை செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் 18 ஆடுகளை கடித்துக் குதறியதில் 8 ஆடுகள் இறந்தன. மேலும் நாய்கள் துரத்தியதில் புதருக்குள் ஓடிய 7 குட்டிகளை காணவில்லை.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த ஆடுகளை ஆட்சியா் அலுவலகம் முன்பு வைத்து போராட்டம் நடத்த விவசாயிகள் திரண்டனா். தகவல் அறிந்து அவினாசிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா் கிராம நிா்வாக அலுவலா் வரவழைக்கப்பட்டு, ஆட்சியரிடம் பேசி உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்து கடிதம் எழுதிக் கொடுத்தனா். அதைத்தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.