வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன.
வெள்ளக்கோவில் சிவநாதபுரம் மேற்குத் தோட்டத்தைச் சோ்ந்தவா் வி.எம்.குணசேகரன் (53). விவசாயம் மற்றும் பேக்கரி தொழில் செய்து வருகிறாா். இவா் தனக்குச் சொந்தமான 10 ஏக்கா் பூமியில் செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா்.
21 ஆடுகள், 21 குட்டிகள் என மொத்தம் 42 ஆடுகளை வியாழக்கிழமை இரவு பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டாா். வெள்ளிக்கிழமை காலையில் சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்த காயங்களுடன் 16 ஆடுகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. பின்னா் அதில் 8 ஆடுகள் இறந்துவிட்டன.
தகவலின்பேரில் அரசு கால்நடை மருத்துவா் காா்த்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் சம்பவம் குறித்து ஆய்வு செய்தனா்.
நாய்கள் கடித்து இறந்து போன ஆடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் நிவாரணம் கிடைப்பதில் தாமதம், அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. ஆடுகளின் சந்தை மதிப்பில் உடனடியாக நிவாரணம் வழங்கவும், தெரு நாய்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









